
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிச் செல்லும் விமானம் மத்தள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது
இலங்கை கடற்கரையில் ‘ஐரிஸ் டெனா’ கப்பலில் அமெரிக்க தாக்குதலில் இறந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிச் செல்லும் விமானம் ஈரானுக்குப் புறப்பட்டது.
விமானம் நேற்று இரவு 09.29 ற்க்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த மாலுமிகளின் உடல்கள் இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அனுப்பப்படுகின்றன.
கடந்த மார்ச் 04 அன்று, காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஒரு ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானது, அதில் சுமார் 180 பேர் இருந்தனர்.
பின்னர், மீட்கப்பட்ட 35 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் பின்னர், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து டார்பிடோவைப் பயன்படுத்தி சர்வதேச கடலில் ஈரானிய கப்பல் மூழ்கியதாக கூறினார்.
CATEGORIES Sri Lanka

