
நாளை முதல் வாகன இலக்கத் தகடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம்
நாளை (19) முதல், வாகனத்தின் இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தைப் பொருத்து எரிபொருள் விநியோகம் நடைபெறும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளில், ஒற்றை இலக்கங்கள் இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

