
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிப்பு
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அமைச்சர் பதவியை ஏற்குமுன் குமார ஜயகொடி மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்படும் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

