
ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறலாம்-ட்ரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப்
ஒரு மாத காலமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரான் ‘இந்த வாரத்தில்’ வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் (Steve Witkoff) தெரிவித்துள்ளார்.
ஒரு மாதமாகத் தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.
பேச்சுவார்த்தை குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும் அதேவேளை, அமெரிக்க – இஸ்ரேயல் படைகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் இரண்டு அணுசக்தி நிலையங்கள் (Nuclear Centers) பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

