
பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை ; இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றம்
உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையிலான கொடூரத் தாக்குதல்களை மேற்கொள்ளும் பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் மூலம் மரண தண்டனை வழங்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30) நிறைவேற்றியுள்ளது.
இந்த நடவடிக்கை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிர வலதுசாரி அரசியல் தரப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

