எஹலியகொடை நகரில் கார் ஒன்று வரிசையாக நின்ற வாகனங்களுடன் மோதிபதில் பல வாகனங்கள் சேதம்

எஹலியகொடை நகரில் கார் ஒன்று வரிசையாக நின்ற வாகனங்களுடன் மோதிபதில் பல வாகனங்கள் சேதம்

எஹலியகொடை நகரில் இன்று இரவு கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, வரிசையாக நின்றிருந்த வாகனங்களுடன் மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (ஏப்ரல் 15) இரவு 7 மணியளவில் எஹலியகொடை நகரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிள், 3 சக்கர வண்டிகள் மற்றும் 2 கார்கள் என வரிசையாக பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக எஹலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் இழந்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )