
நவீனமயப்படுத்தப்பட்ட மருதானை ரயில் நிலையம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு
மருதானை ரயில் நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மேலும், மருதானை ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகள் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்த நவீனமயப்படுத்தல், “Clean Sri Lanka” தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் “சிறந்த பயண இலக்கு” திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது











