
துசித ஹல்லொலுவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (6) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரசாங்க சொத்துக்களை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

