
முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் போதைப்பொருளுடன் கைது
முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை நேற்று (08)ஐஸ் போதைப்பொருளுடன் ராகம பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.
ராகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நேற்று (08) ராகம பஸ் நிலையம் அருகே சோதனை நடத்திய போது குறித்த நபரை 09 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட முச்சக்கர வண்டி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

