ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்

ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதியால் நேற்று (28) இரவு ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

இந்த விசேட இராப்போசன விருந்துபசாரத்தை மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் முதல் பெண்மணி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹெராத் மற்றும் இலங்கைத் தூதுக்குழுவினர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )