
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் 10 ஆம் திகதி பரீட்சை நடைபெற்ற நிலையில், இவ் வாரத்துக்குள் பெறுபேறுகள் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

