
நிக்கவெரட்டியவில் புதையல் தோண்டிய மூவர் கைது
நிக்கவெரட்டிய, பின்னபோலேகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் 20, 32 மற்றும் 51 வயதான நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

