
பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
இந்தோனேஷிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பெக்கோ சமனின் மனைவி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

