
முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நிபுணர்களுடனான விரிவான கலந்துரையாடல்
முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நிபுணர்களுடனான விரிவான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) கொழும்பு பல்கலைக்கழக செனட் சபை மண்டபத்தில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கலவி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நிர்மலால் ரஞ்சித் தேவசிறி, ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பரந்த அளவிலான அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

