
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் 2 கடற்படைக் கப்பல்கள் ஹோர்மோஸ்ஸை கடந்ததாக அமெரிக்கா தெரிவிப்பு – கப்பல் கடந்ததை ஈரான் நிராகரிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகவும், பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தவும் தனது இரண்டு கடற்படைக் கப்பல்கள் அந்தப் பகுதியைக் கடந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்திருந்தது.
இந்தத் தகவலை ஈரான் ஆயுதப்படை தலைமையகம் நிராகரித்துள்ளது. எந்தவொரு கப்பலும் அந்தப் பாதையில் செல்வதற்கான அனுமதி மற்றும் முன்முயற்சி எடுக்கும் அதிகாரம் ஈரானிய ஆயுதப்படைகளுக்கே உரியது என்று ஈரான் கூறியுள்ளது.
குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிவில் (பொதுமக்கள்/வணிக) கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாக நுழைய முயற்சிக்கும் எந்தவொரு இராணுவக் கப்பல் குறித்தும் ஈரானியப் படைகள் மிகவும் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் முடிவெடுக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை மீதான தனது பிடியை ஈரான் தளர்த்தவில்லை என்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான இந்தப் பாதையில் அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயம் தற்போது அதிகரித்துள்ளது.

