
முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு பிணை
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த விவரங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

