
எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிணை
யாழ்ப்பாணம், ஏப்ரல் 29 — கைத் துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட

