
தேசபந்து நீதிமன்றத்தைத் அவமதித்தால் அவரது சொத்து தடை செய்யப்படும்
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவமதித்தால், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க முடியும் என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இன்று (09) மோதரையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.