வெலிகம துப்பாக்கிச் சூடு  ; சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

வெலிகம துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

2023 ஆம் ஆண்டு வெலிகம – பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஆறு சந்தேக நபர்கள் இன்று (21) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

வெலிகம – பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகே 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமார, நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

பின்னராக நேற்றைய தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் சரணடைந்தார்.

இந்த நிலையில் ஏனைய ஆறு பேரும் இன்று சரணடைந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )