பிரிட்டன் விதித்திருக்கும் தடையால் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது

பிரிட்டன் விதித்திருக்கும் தடையால் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது

பிரிட்டன் விதித்திருக்கும் தடையால் தனது அரசியலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) தெரிவித்துள்ளார்.

இந்த தடை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் , ”நான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை.அதனால் இந்த தடை என்னை பாதிக்காது.எனது அரசியலையும் பாதிக்காது.

நான் அப்படியெல்லாம் செயற்பட்டிருந்தால் நான் அங்கு தஞ்சமடைந்த காலப்பகுதியில் பிரிட்டன் என்னை கைது செய்திருக்கலாமே? ஏன் என்னை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும்? அப்போது இவையெல்லாம் தெரியவில்லையா? இவற்றைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )