அமெரிக்காவின் வரி கொள்கை தொடர்பில் நாம் எதிர்வு கூறிய வேளை, ​​ஒலிவாங்கியைத் துண்டித்து, எம்மை பரிகசித்து, அரசாங்கம் நகைச்சுவைகளை காண்பித்ததே தவிர வேறு எதனையும் செய்யவில்லை

அமெரிக்காவின் வரி கொள்கை தொடர்பில் நாம் எதிர்வு கூறிய வேளை, ​​ஒலிவாங்கியைத் துண்டித்து, எம்மை பரிகசித்து, அரசாங்கம் நகைச்சுவைகளை காண்பித்ததே தவிர வேறு எதனையும் செய்யவில்லை

இன்றைய நிலவரப்படி, உலகின் அனைத்து நாடுகளிற்குமான புதிய இறக்குமதி வரியை ஐக்கிய அமெரிக்க குடியரசு அறிவித்துள்ளது.

வர்த்தக நிலுவையை கொண்டுள்ள நாடுகளிற்கு அமெரிக்கா அதிகளவு வரிகளை விதித்துள்ளது. இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

முழு நாட்டையும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தையும் கவலையடையச் செய்துள்ள இந்த விடயம் குறித்து பல மாதங்களுக்கு முன்னரே நாம் எச்சரித்திருந்தோம்.

இருந்த போதிலும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசும்போது, ஒலிவாங்கியை துண்டித்து, எம்மை பரிகசித்து தற்காலிக மகிழ்ச்சியை அரசாங்கம் பெற்றுக்கொண்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டின் மீது 44 சதவீத வரியை விதித்ததன் மூலம் நமது நாட்டின் ஏற்றுமதி பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது. குறிப்பாக ஆடைத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக, ரணசிங்க பிரேமதாச அவர்களால் நிறுவப்பட்ட 200 ஆடைத் தொழிற்சாலைகளும், எமது நாட்டின் ஏற்றுமதித் துறையை நம்பி வாழும் இலட்சக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்புகளும் ஆபத்தில் காணப்படுகின்றன.

அரசாங்கம் இவற்றை கவனத்திற்கொள்ளாது செயல்பட்டு வருகின்றன. அரசாங்கம் வழமையான பொய்களை கூறி மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் வைத்து அரசாங்கத்திடம் முன்வைத்த போது, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விசேட தூதுக் குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டது.

அரசாங்கத்தால் எப்போது இவ்வாறான ஒரு தூதுக் குழு அனுப்பட்டது? இதற்காக அனுப்பப்பட்ட தூதுக் குழு உறுப்பினர்கள் யார் ? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் பொய் சொல்லாமல் இந்த தூதுக்குழுவின் மூலம் அடைந்துள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“தொலைதூரம் காண்போம்-அணி திரள்வோம் -எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு நேற்று (03) கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு மாநாட்டு உரையை நிகழ்த்தும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )