
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு
அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச்.அதுல திலகரத்ன என்ற கைதி வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாக வெளியான செய்தி குறித்து சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
குறித்த விசாரணையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் வெசாக் தினத்தில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
TAGS Criminal Investigation DepartmentPolice Media UnitPresidential AmnestyPresidential Amnesty listSri lanka

