
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ; ஒருவருக்கு பிணை
ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் பெண் ஒருவரிடம் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை 250,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2.5 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

