
வங்காளதேச விமான விபத்து ; பலி எண்ணிக்கை உயர்வு
வங்காளதேசத்தில் விமானப்படைக்குச் சொந்தமான எப்.7 பி.ஜி.ஐ. விமானம் நேற்று முன்தினம் (21) பாடசாலை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 31 ஆக உயர்ந்து உள்ளது.
தற்போது காயம் அடைந்து சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை் 165 ஆக உள்ளது. அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் இருக்கிறது.

