
பிலிப்பைன்ஸில் புயல் ; 25 பேர் பலி
பிலிப்பைன்ஸில் கொமெ என்ற புயல் தாக்கியதால் அந்நாட்டின் பங்கசினான் மாகாணம் அக்னோ நகர் கடுமையான பாதிப்பை சந்தித்தது.
கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 2 லட்சத்து 78 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய புயலால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
CATEGORIES World News

