
ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று (01) ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி வெளியிட்ட காணொளி மூலம் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”தான் கைது செய்யப்பட்ட தருணத்திலிருந்து சமூக ஊடகங்களில் தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அனைத்து தரப்பினரையும் பின்னர் சந்திக்க உள்ளேன்.”என தெரிவித்துள்ளார்.

