
காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலி
பொலன்னறுவை, அரலங்கவில, கனிவியாகல காட்டுப் பகுதியில் நேற்று (31) காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரலங்கவில பகுதியைச் சேர்ந்த 67 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரக்குற்றிகளை சேகரிப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது
CATEGORIES Sri Lanka

