
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்து ; மூவர் காயம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் நேற்று (01) மாலை வவுனியா–மன்னார் வீதியில், வவுனியா நோக்கி வந்த பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் மூவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES Sri Lanka

