
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டிருந்த நீர் விநியோகத்தடை ரத்து
கொழும்பில் சில பகுதிகளில் நாளை (06) சனிக்கிழமை அமுல்படுத்தப்பட்டிருந்த 09 மணித்தியால நீர் விநியோகத்தடை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுக்கும் பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை, தெஹிவளை, மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளுக்கும் நாளை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


