தங்காலை துப்பாக்கிச் சூடு ; தம்பதியினர் பலி

தங்காலை துப்பாக்கிச் சூடு ; தம்பதியினர் பலி

தங்காலை – உனாக்குருவ பகுதியில் நேற்று (18) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுகளையுடைய தம்பதியினர் என தெரியவந்துள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )