
அம்பாறை கால்வாயில் கார் விழுந்ததில் தாய் தந்தை பிள்ளை உயிரிழப்பு
அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் உள்ள பொலிவியா கிராமத்திற்கு அருகில் கால்வாக்குள் கார் ஒன்று கால்வாய்க்குள் விழுந்ததில் காரில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
காரில் பயணித்த தந்தை தாய் பிள்ளை ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்றபோது குறித்த கார் கால்வாயில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை மோட்டார் வாகனத்தில் பயணித்த மூன்று பேரை மீட்க
மீட்புக்குழுவினருடன் பிரதேசவாசிகள் ஒன்றிணைத்து செயற்பட்டனர்.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

