
கிரேக்க பிணைமுறி வழக்கு ; அஜித் நிவாட் கப்ராலை உட்பட நால்வருக்கு விடுதலை
2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி முதலீட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் இருந்து இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குற்றமற்றவர் எனக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேலும், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஏனைய மூன்று பிரதிவாதிகளுக்கும் எந்த வகை நிபந்தனைகளுமின்றி விடுதலை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

