
பேரிடரால் பாதிக்கப்பட்ட 3,665 குடும்பங்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது
பேரிடரால் பாதிக்கப்பட்ட 3,665 குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்கள் வாங்குவத்ற்கு ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 147,628 குடும்பங்கள் உதவி பெற தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்தார்.
ரூ. 25,000 அல்லது ரூ. 50,000 நிவாரணங்களைப் பெறுவதற்கு நில உரிமை ஒரு தேவையல்ல என்பதை அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
CATEGORIES Sri Lanka

