
அனர்த்தத்தை எதிர்கொண்டாலும், 300 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட முடியும்
சமீபத்திய சூறாவளி டித்வா போன்ற கடுமையான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டாலும், தற்போதைய சூழ்நிலையை விட மீள்தன்மையுடன் செயல்படுவதனால் 2030 ஆம் ஆண்டிற்குள் இலங்கை 300 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை. அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜெயசுந்தரா கூறினார்.
தேசிய உற்பத்தித்திறன் செயலகம் ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் சான்றிதழ் அமைப்பாக மீண்டும் அங்கீகாரம் பெற்ற பிறகு நடைபெற்ற முதல் சான்றளிக்கப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர் சான்றிதழ் விழாவில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

