
மண்சரிவினால் வீடுகளை இழந்து, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் தங்கியுள்ள மக்களிடம் ஜனாதிபதி நலன் விசாரித்தார்.
மண்சரிவினால் வீடுகளை இழந்து, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக இன்று (01) சென்று மக்களிடம் நலன் விசாரித்தார்.
சுதர்ஷனாராமய விகாரையில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தில் 47 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 189 பேர் தற்காலிகமாக தங்கியிருந்தனர் .
இந்நிலையில் தற்போது வரை அங்கு தங்கியுள்ள 07 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரை சந்தித்து அந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களின் நலன்புரி மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்தார்.
CATEGORIES Sri Lanka

