கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பயணி கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் “கிரீன் சேனல்” வழியாக, ரூ. 36 இலட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை வெளியே கொண்டு செல்ல முயன்ற இலங்கை பயணி ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் குருநாகல் – மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று (10) அதிகாலை 2.00 மணிக்கு, இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-232 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.

சோதனையின் போது, வெளிநாட்டுத் தயாரிப்பான 20,700 “பிளாட்டினம்” மற்றும் “மான்செஸ்டர்” சிகரெட்டுகள், 36 மின்னணு சிகரெட்டுகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )