
78வது தேசிய சுதந்திர தின முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 49 கைதிகளுக்கு சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், ஏற்கனவே தண்டனை அனுபவித்த ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு வாரம் நிவாரணம் வழங்கப்படும் என்று சிறைச்சாலைகள் துறை தெரிவித்துள்ளது.
மேலும், 75,000 ரூபாய்க்கும் குறைவான அபராதத்தை செலுத்தத் தவறியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளின் மீதமுள்ள தண்டனைப் பகுதிகளும் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

