
ஜனாதிபதிக்கும் பூட்டான் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே (Tshering Tobgay) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) பிற்பகல் நடைபெற்றது.
புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

