
ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல ஈரான் ஏவுகணைகளை இடைமறித்துள்ள நிலையில், குறித்த தாக்குதல்களில் அபுதாபியில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில், ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட பின்னரும் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.

