
“என்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் விஜய்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் மனைவி சங்கீதா புதிய மனு
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள புதிய மனு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, இருவருக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, சட்டப்படி விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த விவாகரத்து வழக்கு சட்டரீதியாக நடைபெற்று வரும் சூழலில், தற்போது அந்த வழக்கின் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தன்னை கணவர் விஜய்யின் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஒரு புதிய இடைக்கால மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாக கடந்த மாதம் 27ஆம் திகதி செய்திகள் வெளியாகின.
சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.
விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.
இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில் சங்கீதா கூறியிருப்பதாவது:-
- விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன்.
- விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும்.
- விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது.
- நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கோரினால் வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பு மிரட்டுவதாகவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

