
ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் தாக்குதல் – 112 பேர் உயிரிழப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக்குதல்களில், ஈரானின் குர்திஸ்தான் (Kurdistan) மாகாணத்தில் இதுவரை குறைந்தது 112 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த தாக்குதல்களில் குறைந்தது 969 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களால் அப்பகுதியில் பதற்றமான நிலைமை நிலவுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

