
கொலம்பியாவில் விமான விபத்து ; 66 பேர் உயிரிழப்பு
தெற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற விமானப்படை விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டின் விமானப்படைத் தளபதி தெரிவித்ததன்படி, விபத்துக்குள்ளான விமானத்தில் 114 இராணுவ வீரர்களும் 11 விமானப் பணியாளர்களும் பயணித்திருந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சி-130 ஹெர்குலஸ் ரக விமானம், புடுமாயோ மாகாணம்வில் உள்ள புவேர்ட்டோ லெகுயிசாமோ நகருக்கு அருகே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES World News

