
நாளை ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வாகனங்கள் இரண்டிற்கும் எரிபொருள்
நாளை (ஏப்ரல் 01) ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு எண்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இன்று (31) மற்றும் நாளை (01) ஆகிய இரண்டு தினங்களும் ஒற்றை எண்களைக் கொண்ட தினங்களாக அமைவதால், நாளை தினத்தில் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கொண்ட வாகனங்களுக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் மேலாண்மை பணிப்பாளர் மயூரு நெத்திகுமாரகே தெரிவித்தார்.

