உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 11.41 சதவீதம் அதிகரித்து, 111.54 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

மேலும், பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 109 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளதுடன், இது தொடர்ச்சியான உயர்வாகக் கருதப்படுகிறது.

இதனுடன், ஒரு பேரல் மார்பன் கச்சா எண்ணெயின் விலை 114.84 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த மார்பன் கச்சா எண்ணெய், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி பகுதியில் உற்பத்தி செய்யப்படுவதுடன், இது தூய்மையானதும், இலகுவானதும், குறைந்த கந்தக அளவு கொண்டதுமானதால் சுத்திகரிப்பு எளிதாகும்.

இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் தயாரிப்புக்கு இது மிகச் சிறந்ததாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )