
முன்னாள் MP சந்தன கத்ரியாராச்சிவீட்டில் துப்பாக்கி மகஸின்கள் – தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் CID யால் கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனை பிடியாணையின் அடிப்படையில் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து இரண்டு டி-56 துப்பாக்கி மெகசின்கள், 221-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

