
இந்திய மீனவர்கள் 8 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது இன்று (29) செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த எட்டு மீனவர்களும் தலைமன்னார் கடலில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீனவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
CATEGORIES Sri Lanka

