
குளவிக் கொட்டுக்கு இலக்காகி 6 தொழிலாளர்கள் பாதிப்பு
பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் ஆகிய தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு தொழிலாளர்களை தாக்கிய குளவி , இராணிகாடு தோட்ட பகுதியில் தெழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்களையும் தாக்கியுள்ளது.
CATEGORIES Sri Lanka

