
அக்குரேகொட இரட்டைக் கொலை ; துப்பாக்கிதாரிகளில் ஒருவர் அடையாளம்
அக்குரேகொடவில் வழக்கறிஞர் ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி பத்தரமுல்லயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவ ஆராச்சி மற்றும் 41 வயதுடைய அவரது மனைவி நிசன்சலாவும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது .

