
ஹம்பாந்தோட்டையில் 500 லிட்டர் எரிபொருள் பதுக்கல் ; ஒருவர் கைது
ஹம்பாந்தோட்டை மாவட்டம், கட்வேவா, சல்மலை பகுதியில் சுமார் 500 லிட்டர் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 480 லிட்டருக்கும் அதிகமான டீசலும், சுமார் 20 லிட்டர் பெட்ரோலும் கண்டெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபரும், கைப்பற்றப்பட்ட எரிபொருள்களும் ஹந்தாட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

