
சர்வதேச மன்னிப்பு சபை பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு
சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் Dr. Agnes Callamard, அதன் ஆய்வாளரான தியாகி ருவன்பத்திரன, ஸ்மிருதி சிங் (Regional director), பாபுராம் பாண்டி (Deputy Regional Director (campaign), Isabelle Lassee (Deputy Regional Director (campaign) ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
ஏறக்குறைய ஒரு மணித்தியாலமளவில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கையின் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.